Sunday, June 8, 2025

ஒரு வருடத்திலேயே ஒருவர் லட்சாதிபதியாகலாம் – பட்ஜெட் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கருத்து

2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

மிக முக்கியமாக தனிநபர் வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது : வரி வரியாக மக்கள் கொண்டாடும் பட்ஜெட். மிக நல்ல ஆரோக்கியமான பட்ஜெட். ரூ.12 லட்சம் வரை வருமான உச்ச வரம்பு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் ஒரு வருடத்திலேயே ஒருவர் லட்சாதிபதியாகலாம் என தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news