இந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி இருப்பவர்களை கண்டறிந்து மருத்துவ சிகிச்சை செய்துகொள்ள அறிவுத்தியுள்ளது.