தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சிறப்பு ரெயில் வருகின்ற வெள்ளிக்கிழமையும், மறுமார்க்கமாக, திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு யில் வரும் ஜூன் 8ம் தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரயில், வரும் ஜூன் 8ம் தேதி முதல் 29ம் தேதி வரையும், மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் ஜூன் 9ம் தேதி முதல் 30ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.