அரசு வேலைக்காக தேடும் இளைஞர்களுக்கு SSC-இன் புதிய ஒரு நற்செய்தி அறிவிப்பு! இனிமேல் மத்திய அரசுப் பணிகளுக்கான விண்ணப்பம், நேரில் சென்று சைபர் கஃபே அல்லது பி.எஸ்.சி-க்கு போய் பண்ண வேண்டிய அவசியமில்லை. உங்களிடம் கைபேசி இருந்தாலே போதும்!
பணியாளர் தேர்வு ஆணையம் SSC, தனது புதிய ‘mySSC’ என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம், பதிவு முதல் தேர்வுக்கான தகவல்கள் வரை — அனைத்தையும் உங்கள் மொபைல் வாயிலாகச் செய்யலாம். இது கிராமப்புற இளைஞர்களுக்கு உண்மையாகவே பெரிய வாய்ப்பு.
இந்த செயலியில் முக்கியமான அம்சம் — ஆதார் OTP மற்றும் Face Authentication. அதாவது, முகம் மூலம் அடையாளம் தெரிவிக்கும் வசதி. இதனால், வேறு யாரையும் நம்பி விண்ணப்பிக்க தேவையில்லை. தாங்களே எளிதாக பதிவு செய்து விடலாம்.
இந்த செயலியை உருவாக்கியிருக்கிறது ‘Cubastion Consulting’(கியூபாஷன் கன்சல்டிங்) நிறுவனம். அவர்கள் CEO ரவி குமார் சொல்வது போல, “இது நிஜமாகவே தரகர்களை அகற்றி, இளைஞர்களுக்கு நேரடி அதிகாரத்தைத் தரும் ஒரு மாற்றம்.”
இந்த செயலியைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் Android மொபைல் பதிப்பு 11 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். அதோடு, ‘Aadhaar Face RD’ செயலியை உங்களுடைய போனில் இன்ஸ்டால் செய்து, முக அங்கீகாரப் பதிவு செய்ய வேண்டும்.
முக்கியமாக — OTR, அதாவது One Time Registration பக்கம் ஆரம்பம். இங்கே ஒரு முறை உங்கள் விவரங்களைப் பதிவு செய்தால், அதே தகவல்களே அடுத்தடுத்து பயன்படுத்தப்படும். ஆதார் விவரங்கள் உங்களது OTR-ஐ மேலெழுத மாட்டாது எனவும் SSC உறுதி செய்துள்ளது.
ஜூன் 2025 முதல் நடைபெறும் அனைத்து தேர்வுகளுக்கும் இந்த செயலி கட்டாயமாகவே பயன்படுத்தப்படும்.
இனி அரசு வேலை தேடுவது சுலபம். நேரம், பணம், கடுப்பு — எதுவும் இல்லாமல், நேரடியாக, பாதுகாப்பாக, முழு கட்டுப்பாடுடன் விண்ணப்பிக்க முடியும்.