Monday, September 1, 2025

தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து நொறுக்கிய இலங்கை அரசு

தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் போது எல்லை தாண்டி சென்றதாக அவ்வப்போது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து வருகிறது.

தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை கடற்படை வசம் உள்ளன. இதில் தமிழக மீனவர்களின் 33 படகுகளை இலங்கை அரசு அரசுடைமை ஆக்கியுள்ளது.

இதையடுத்து அங்கு அரசுடைமையாக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 30-க்கும் மேற்பட்ட படகுகள் பொக்லைன் எந்திரம் மூலம் உடைக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வெளியானதை பார்த்து தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News