சிங்கப்பூரின் தனியார் விமான நிறுவனம் அடுத்த மாதம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஜெட் ஸ்டார் ஆசியா என்ற தனியார் விமான நிறுவனம் இயங்கி வந்தது. ஆஸ்திரேலியாவின் குவான்டஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்த இந்த நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக போதிய பயணிகள் இல்லாததால் நஷ்டத்தை சந்தித்தது.
இந்த நிலையில், ஜெட் ஸ்டார் ஆசியா விமான நிறுவனம், அடுத்த மாதம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.