Friday, June 6, 2025

உலகம் முழுதும் கடல்கள் கருமையாக மாறும் அதிர்ச்சி! மனித இனத்தின் அழிவுக்கான அறிகுறியா?

பிரிட்டனில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் உலகப் பெருங்கடலின் ஐந்தில் ஒரு பகுதி கருமையானதாக மாறியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு “கடல் அடர் நிறமடைதல்” என்று அழைக்கப்படுகின்றது.

கடலின் மேல் பகுதி, photic zone என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த மண்டலத்தில் தான் கடல் உயிரினங்களில் 90% உயிர்கள் வாழ்கின்றன. ‘Darkening of the global Ocean’ என்ற ஆய்வுக்காக, கடல் மாதிரிகள் சுமார் இருபது ஆண்டுகளுக்கான செயற்கைக்கோள் தரவுகளை கொண்டு ஆய்வு செய்யப்பட்டன.

நாசாவின் ஓஷன் கலர் வெப் புள்ளிவிவரங்கள், உலகப் பெருங்கடல் 9 கிலோமீட்டர் அளவுடைய பிக்சல்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிக்சலிலும் கடல் மேற்பரப்பில் நிகழும் மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டன. மேலும் சூரிய மற்றும் சந்திர கதிர்வீச்சு மாதிரிகளால் பகலிலும் இரவிலும் கடல் உயிரினங்கள் எப்படி பாதிக்கப்படலாம் என்பதைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டன. இரவு நேரங்களில் ஒளி அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் பகல் நேரத்தை விட குறைவாக இருந்தாலும் அதுவும் முக்கியமானதாக இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடலின் மேற்பகுதியில் ஏற்படும் மாற்றங்களாலும் கடல் நீருக்குள் ஒளி ஊடுருவுவதை கடினமாக்கும் போது கடல் கருமை நிறத்தில் மாறுவதாக தெரியவந்துள்ளது. கடல் அடர் நிறமாவதால், ஒட்டுமொத்த மனித இனமும் உடனடியாக அழிந்துவிடாது என்றாலும் மனிதர்கள் சுவாசிக்கும் காற்றுக்கும், அவர்கள் உண்ணும் மீனுக்கும், காலநிலை மாற்றத்தை சீர்செய்யும் நிகழ்வுகளுக்கும் பாதிப்பு உண்டாகும் என்று ஆராய்ச்சியாளர் டேவிஸ் கூறியிருப்பது ஒரு சிறிய அளவிலான பாதிப்புக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news