Saturday, February 21, 2026

பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல்., 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த உண்மை

கேரள மாநிலம், புன்னபுரா பகுதியை சேர்ந்தவர் உஷா ஜோசப் (51). இவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஆலப்புழா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பிய தினத்திலிருந்தே அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை. இதனால் அவருக்கு சிறுநீர் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறத் தொடங்கியது.

இதையடுத்து அவர் சிறுநீரக நிபுணரை அணுகினார். அங்கு மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்-ரே பரிசோதனையில் அவரது வயிற்றுக்குள் சுமார் 10 செ.மீ. நீளமுள்ள கத்தரிக்கோல் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, எக்ஸ்-ரே அறிக்கைகளுடன் மீண்டும் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். விபரத்தை அறிந்த மருத்துவர்கள் பதற்றமடைந்தனர். பின்னர் வயிற்றில் உள்ள கத்தரிக்கோலை அகற்றலாம், ஆனால் இந்த விஷயத்தை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் நடந்த விசாரணையில், 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக கத்தரிக்கோல் வயிற்றுக்குள் விடப்பட்டு தைக்கப்பட்டிருப்பது உறுதியானது. இந்த அலட்சியச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் ஒரு பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் விடப்பட்டு தைக்கப்பட்ட இந்த சம்பவம் கேரள முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News