புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நாளை மார்ச் 10-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
மார்ச் 10-ம் தேதி விடுமுறையை ஈடுகட்ட மார்ச் 15-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.