பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் இன்று புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார். செங்குத்து பாலத்தை இறக்கும்போது பழுது ஏற்பட்டு பாலம் கோணலாக நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அதிகாரிகள் பழுதை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சிறிது நேரத்திலேயே பாலம் பழுதடைந்ததால் எதிர்க் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.