புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுமுறை, திருவாரூர் மாவட்டங்களுக்கு நவம்பர் 29ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 28ம் தேதி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை. புதுக்கோட்டை, உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்துள்ளது.
நவம்பர் 29ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் தஞ்சாவூர் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும்.
