Monday, December 22, 2025

ஒரே வேனில் ஓபிஎஸ், செங்கோட்டையன்., இ.பி.எஸ் கொடுத்த ரியாக்ஷன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வந்தது.

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியிருந்தார். செங்கோட்டையனின் கருத்துக்கு சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதையடுத்து செங்கோட்டையனை கட்சிப் பதவி​களில் இருந்து நீக்கி பழனி​சாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு ஓபிஎஸ் – செங்கோட்டையன் ஒரே வேனில் வந்தது குறித்த எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “எனக்குத் தெரியவில்லை, வந்தால் பதில் சொல்றேன்” என்று தெரிவித்தார்.

Related News

Latest News