IPL தொடரின் Qualifier 1 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள், சண்டிகரின் Maharaja Yadavindra Singh மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை IPL கோப்பை வென்றதில்லை என்பதால், இன்றைய ஆட்டம் நிச்சயம் ‘பேய்க்கும் பேய்க்கும் சண்டை’ என்பதாகத் தான் இருக்கும்.
பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் என 3 அணிகளை Play Off அழைத்துச் சென்று புதிய சாதனை படைத்துள்ளார். அவரின் தலைமையின் கீழ் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே பஞ்சாப் கெத்து காட்டுகிறது. மறுபுறம் RCBயின் புதிய கேப்டன் ஜிதேஷ் சர்மாவும் அபாரமாக செயல்படுகிறார்.
பெங்களூரு அணியில் இதுவரை 8 வீரர்கள், மேட்ச் வின்னருக்கான அவார்டை வாங்கியுள்ளனர். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கின்றனர். இந்த Qualifier 1 போட்டியில் வென்றால் நேராக இறுதிப்போட்டிக்கு சென்றுவிடலாம் என்பதால், இரு அணிகளுமே கடைசிவரை யுத்தம் செய்யக்கூடும்.
இந்தநிலையில் பஞ்சாப்பை தோற்கடிக்க RCB புதிய வியூகம் வகுத்துள்ளதாகத் தெரிகிறது. அந்த அணியின் முக்கிய வீரர்களான ஷ்ரேயாஸ், பிரப்சிம்ரன் சிங் இருவருமே, புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சில் விக்கெட்டை விரைவாகப் பறிகொடுத்து விடுகின்றனர். எனவே பவர்பிளேவில் புவனேஷ் 3 ஓவர்கள் பந்துவீசினால், பஞ்சாப்புக்கு அது பெரிய பின்னடைவாக அமைந்து விடும்.
இது மட்டுமின்றி பவர்பிளேவில் 56 சதவீத பந்துகளை, புவனேஷ்வர் Dot பந்துகளாக வீசியிருக்கிறார். இதனால் RCBக்கு இன்றைய ஆட்டத்தில் புவனேஸ்வர் தான் துருப்புச்சீட்டாக இருப்பார். இதேபோல பஞ்சாப் அணி மூத்த பவுலர் யுஸ்வேந்திர சாஹலைத் தான் பெரிதும் நம்பியிருக்கிறது.
ஜிதேஷ் சர்மா, மயங்க் அகர்வாலுக்கு எதிராக, சாஹலின் ரெக்கார்ட் சிறப்பாக உள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் புவனேஷ்வர் – சாஹலுக்கு இடையிலானதாகத் தான் இருக்கும். இருவரில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ? அவர்களின் அணியே, இன்று வெற்றிக்கனியை சுவைக்கும்.
ஒருவேளை மழையால் இன்றைய ஆட்டம் பாதிக்கப்பட்டால் பஞ்சாப் நேராக இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும். பெங்களூரு அணி Eliminator போட்டியில் வெற்றிபெறும் அணியுடன், மோதி வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.