Wednesday, July 2, 2025

திருவாடானை அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே முள்ளிமுனை கடற்கரை பகுதியைச் சேர்ந்த ஹனிபா என்பவருக்கு சொந்தமான படகில் நேற்று அதிகாலை ஹனிபா, பால்கனி, மணி ஆகிய மீனவர்கள் கடலுக்குச் சென்று வலையை விரித்தி வைத்திருந்தனர்.

நேற்று மாலை வலையை எடுக்கச் சென்றபோது வலையில் சுமார் 70 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை வலையில் சிக்கி உயிருக்கு போராடி வந்ததை கண்ட மீனவர்கள் தங்களது வலை சேதமடைவதை கருத்தில் கொள்ளாமல் கத்தியால் வலையை அறுத்து சிக்கியிருந்த ஆமையை மீட்டு பத்திரமாக மீண்டும் கடலில் விட்டனர். இது பெருந்தலைக் கடலாமை எனவும், உலகில் பரந்து காணப்டும் கடலாமை வகைகளுள் ஒன்று எனவும் கூறப்படுகிறது. இவை 90 செ.மீ (35 அங்குலம்) வளரக்கூடியதும் 135 கிலோ வரை வளரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆமைகளின் ஆயுட்காலம் 47 முதல் 67 ஆண்டுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ் கடலில் வாழக்கூடிய அரிய வகையான ஆமை வகைகள் தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் கடற்கரையை நோக்கி வரும்பொழுது இவ்வாறு மீனவர் வலையில் சிக்குவதாக கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news