Friday, June 6, 2025

ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாட்டில்கள் மூலம் இத்தனை கோடி வருமானமா?

கடந்த சில ஆண்டுகளாக ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாட்டில்கள் மூலம் ஐ.ஆர்.சி.டி.சி கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறது.

பயணிகளின் வசதிக்காக, ஐ.ஆர்.சி.டி.சி., ரயில்நீர் என்ற சொந்த பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில் பயணிகளுக்கு சுத்தமான தண்ணீரை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த வணிகம், நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வெறும் ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த நிதியாண்டில், தண்ணீர் பாட்டில்களை மட்டும் விற்பனை செய்து ரூ.29.22 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்தது. சமீபத்திய அறிக்கைகளின்படி, நிறுவனம் 2024 நிதியாண்டில் மொத்தம் 395 மில்லியன் தண்ணீர் பாட்டில்களை உற்பத்தி செய்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news