Tuesday, August 5, 2025
HTML tutorial

ஆம்பூர் அருகே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து

ஆம்பூர் அருகே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 3 குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து 28 பயணிகளுடன் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கியது.

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்து மண்குவியல் மீது மோதி கவிழ்ந்தது. இதில் 3 குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்பூர் கிராமிய போலீசார் கிரேன் மூலம் பேருந்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News