இப்போது ஆசியாவில் ஒரு பெரிய பதட்ட நிலை உருவாகி வருகிறது. சீனா, தைவானை ராணுவமாக ஆக்கிரமிக்க தயாராகி வருகிறது. அதோடு, தென் சீனக் கடலை முழுமையாக தன்னடிக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில், அமெரிக்காவின் பாதுகாப்பு தலைவர், பீட் ஹெக்செத் சொன்னது என்னவென்றால் – “சீனாவின் அச்சுறுத்தல் உண்மையானது. இது ஒருநாள் நேரடி தாக்குதலாக மாறும் அபாயம் இருக்கிறது,” என்றார்.
தைவான் தீவைச் சுற்றிலும் சீனா ராணுவ பயிற்சிகளை கடுமையாக செய்து வருகிறது. இது வெறும் பயிற்சி இல்லை – ஒரு நாள் நேரடி தாக்குதலாக மாற வாய்ப்பு இருக்கிறது.
இதேபோல் தென் சீனக் கடலும் ஒரு பெரிய விவகாரம். உலக வர்த்தகத்தில் 60 சதவீதம் மூலப்பொருட்கள் அந்தக் கடல் வழியாகத்தான் செல்கின்றன. ஆனால் அந்தக் கடலை சீனா தனக்கே சொந்தம் என கூறி செயற்கை தீவுகள் அமைத்து ராணுவத்தை குவித்து வருகிறது.
2016-ல் சர்வதேச நீதிமன்றம் சீனாவின் உரிமை கோரலை நிராகரித்தது. ஆனாலும் சீனா அந்த தீர்ப்பை மதிக்கவில்லை.
இதற்கெல்லாம் எதிராக, அமெரிக்கா இப்போது தனது நட்பு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. “இந்த அபாயத்தை அவமதிக்க வேண்டாம். ராணுவத் தயாரிப்பை அதிகரிக்க வேண்டும்,” எனப் பேசப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இந்தியா மிகவும் முக்கியமான நாடாக மாறியிருக்கிறது. இந்தியா, அமெரிக்காவுடன் வர்த்தகமும் ராணுவ ஒத்துழைப்பும் பலப்படுத்தி வருகிறது. எனவே இந்த எச்சரிக்கை இந்தியாவுக்காகவே என்று சொல்லலாம்.
இது வெறும் சீனாவுக்கும் தைவானுக்கும் நடக்கிறது என்று நினைக்கக்கூடாது. இது முழு ஆசியா மற்றும் உலக வர்த்தகத்திற்கே ஒரு பெரிய ஆபத்து என்றே உலக நாடுகள் எச்சரிக்கை விடுகின்றனர்….