Saturday, August 16, 2025
HTML tutorial

சென்னையில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை

மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை (25.5.2025) அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் நாளை (25.5.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் பி பிளாக், நியூ டைனி செக்டர், பழைய டைனி செக்டர், 1வது மெயின் ரோடு, ஏடிசி சாலை, 2வது குறுக்குத் தெரு, 3வது தெரு செக்டர்-II, 2வது மெயின் ரோடு பகுதி, சிடிஎச் சாலை, மேனாம்பேடு சாலை, கோச்சர் அப்பார்ட்மென்ட், கோரமெண்டல் டவுன், 7வது மற்றும் 8வது தெரு, சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு கட்டம், குக்சன் சாலை, 7வது தெரு செக்டர் 3, ஆவின் சாலை கூட்டுப் பகுதி, சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு கட்டம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News