Wednesday, December 24, 2025

போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம் : ரூ.1000 முதலீடு.. இரட்டிப்பு வருமானம் உறுதி

விலைவாசி உயர்வு நிலவும் இக்காலத்தில், பாதுகாப்பான சேமிப்புக்கு கிசான் விகாஸ் பத்ரா திட்டம் சிறந்த விருப்பம். இது மத்திய அரசு உத்தரவாதம் கொண்ட போஸ்ட் ஆபிஸ் சேமிப்புத் திட்டமாகும். இதில் முதலீடு 115 மாதங்கள் (9 ஆண்டுகள் 7 மாதங்கள்)ல் இரட்டிப்பாகும்.

திட்ட விவரங்கள்

  • வட்டி: 7.5% கூட்டு வட்டி; 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் உண்டு.
  • முதலீடு: குறைந்தபட்சம் ரூ.1,000; அதிகபட்சம் இல்லை.
  • பாதுகாப்பு: மத்திய அரசு உத்தரவாதம், சந்தை ஏற்ற இறக்கம் இன்றி.

யார் சேரலாம்

யார் வேண்டுமானாலும்; வயது வரம்பு இல்லை. ஒற்றை/ஜாயிண்ட் (மேலும் 3 பேர்) கணக்கு திறக்கலாம். ஆதார், வயது சான்று, போட்டோ, விண்ணப்பம் தேவை.

எப்படி இரட்டிப்பாகும்

ரூ.1 லட்சம் முதலீட்டிற்கு:

  • 1ஆம் ஆண்டு: ரூ.7,500 வட்டி.
  • 2ஆம் ஆண்டு: ரூ.8,062 வட்டி.
  • 115 மாதங்களில்: ரூ.2 லட்சம். ரூ.5 லட்சம் போட்டால் ரூ.10 லட்சம் பெறலாம்.

Related News

Latest News