Monday, December 22, 2025

தவெக அலுவலகத்திற்கு சென்ற பாமக நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கும் திமுகவை கண்டித்தும் பாமக தரப்பில் டிசம்பர் 17ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்க திமுகவை தவிர்த்து அனைத்து கட்சிகளுக்கும் அன்புமணி கடிதம் எழுதி இருக்கிறார்.

இந்த கடிதத்தை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் வழக்கறிஞர் பாலு நேரில் சென்று கொடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடிதத்தை பெற்றுக் கொண்டார். இதனால் பாமகவின் போராட்டத்தில் தவெக பங்கேற்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

Related News

Latest News