பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அன்புமணி ராமதாஸ் இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பா.ம.க. நிர்வாகிகள் தனியார் மண்டபத்தை நோக்கி படையெடுத்து வரத் தொடங்கி உள்ளனர். இதனால் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டம் வெறிச்சோடி காணப்படுகிறது.