Monday, December 22, 2025

விஜய்யின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு., அடுத்த பிளான் இதுதான்

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் கரூரில் கடந்த செப். 27-ஆம் தேதி பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த அசம்பாவித சம்பவம் காரணமாக, விஜய்யின் பிரசாரம் சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து சேலத்தில் இருந்து அவருடைய பிரசாரம் பயணம் மீண்டும் தொடங்கப்போவதாக தகவல் வெளியான நிலையில்,அதற்கு அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் மனு அளித்தனர். இதற்க்கு போலீசார் திருகார்த்திகை பாதுகாப்பு பணியை காரணம்காட்டி அனுமதி கொடுக்க மறுத்து உள்ளனர்.

இதையடுத்து போலீசார் 3 இடங்களுக்கு பதிலாக ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து கொடுங்கள் என்றனர். அதன்படி த.வெ.க. நிர்வாகிகள் சீலநாயக்கன்பட்டி மைதானத்தை தேர்வு செய்து செய்துள்ளனர்.

Related News

Latest News