மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஓய்வூதியத் திட்டமான தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மூலம், மாதம் ரூ.1,000 முதலீடு செய்து ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.1 லட்சம் வரை ஓய்வூதியம் பெற முடியும். 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், இந்திய குடிமக்களுக்கு ஓய்வுக்காலத்தில் நிலையான வருமானத்தை உறுதி செய்வதாகும்.
18 முதல் 70 வயதுக்குள் உள்ள எந்த இந்திய குடிமகனும் இந்தத் திட்டத்தில் சேரலாம். இதில் முதலீடு செய்யப்படும் தொகை பங்குச் சந்தை, அரசுப் பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சாதனங்களில் முதலீடு செய்யப்படுகிறது.
முதலீட்டாளர் 60 வயதை அடைந்ததும், மொத்த சேமிப்புத் தொகையில் 60 சதவீதத்தை வரிவிலக்கு உடன் ஒருமுறையாகப் பெறலாம். மீதமுள்ள 40 சதவீதத் தொகையில் இருந்து மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஓய்வு பெற்ற பிறகு மக்களுக்கு நிலையான வருமானம் கிடைக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இந்தத் திட்டத்தை நிர்வகித்து வருகிறது.
வேலை செய்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஃப்ரீலான்ஸர்கள் உள்ளிட்ட அனைவரும் NPS கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்.
அந்தத் தொகை அனுபவம் வாய்ந்த நிதி மேலாளர்களால் பங்குச் சந்தை, அரசுப் பத்திரங்கள் மற்றும் பிற நிதிச் சொத்துகளில் முதலீடு செய்யப்படும். 60 வயதில், ஒரு பகுதியை ஒருமுறையாகப் பெற்றுக்கொள்ளலாம்; மீதமுள்ள தொகை மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
NPS கால்குலேட்டரின் கணக்கீட்டின்படி, ஒருவர் 21 வயதில் முதலீடு செய்யத் தொடங்கி, தொடர்ந்து 40 ஆண்டுகள் மாதம் ரூ.1,000 செலுத்தினால், ஓய்வூதியம் பெற தேவையான தொகையை வருடாந்திரத் திட்டத்தில் (அன்யூட்டி) முதலீடு செய்ய வேண்டும்.
மொத்த சேமிப்பில் 50 சதவீதத்தை அன்யூட்டியில் முதலீடு செய்ததாகவும், ஆண்டுக்கு சராசரியாக 12 சதவீத வருமானம் கிடைக்கும் என்றும் கணக்கிட்டால், 60 வயதில் மொத்த சேமிப்பு ரூ.3.51 கோடியாக இருக்கும். இதில் ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்படும் தொகை ரூ.1.75 கோடி ஆகும். இந்த சூழலில் உங்களுக்குமாத ஓய்வூதியமாக ரூ. 1,16,800 கிடைக்கும். இதுபோன்ற பல நன்மைகள் இந்தத் திட்டத்தில் உள்ளனர். நிறையப் பேர் இந்தத் திட்டத்தில் ஆர்வத்துடன் முதலீடு செய்கின்றனர்.
