Thursday, February 5, 2026

சூடானில் நோயாளிகள் உள்பட 460 பேரைக் கொன்ற துணை ராணுவம்

சூடானில், அரசுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் துணை ராணுவப் படை எல் – ஃபேஷர் நகரத்தைக் கைபற்றி அங்குள்ள மக்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் வடக்கு தர்ஃபூர் மாகாணத்தின் தலைநகர் எல் – ஃபேஷரில் உள்ள சௌதி மகப்பேறு மருத்துவமனையில், நேற்று (அக். 28) துணை ராணுவப் படை வீரர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என சுமார் 460-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுகுறித்த விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக துணை ராணுவப் படையின் தளபதி ஜெனரல் முகமது ஹம்தான் டகலோ தெரிவித்துள்ளார்.

Related News

Latest News