Saturday, May 10, 2025

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, பெட்ரோல் பங்குகளை மூட பாகிஸ்தான் அரசு உத்தரவு

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்லாமாபாத் எல்லைக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் பெட்ரோல் பங்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி வரும் பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்குகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Latest news