சமீபத்திய இந்தியா பாகிஸ்தான் மோதலில் பலத்த அடி வாங்கி பொறிகலங்கிப்போய் இருக்கிறது பாகிஸ்தான். அதன் எதிரொலியாக சஞ்சய் ஜா தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழுவின் 10 நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யுமாறு மலேசிய அரசாங்க அதிகாரிகளிடம் பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. “நாங்கள் ஒரு இஸ்லாமிய நாடு, நீங்களும் ஒரு இஸ்லாமிய நாடு, அதனால் இந்தியக் குழுவின் பேச்சைக் கேட்காதீர்கள்” என்று பாகிஸ்தான் கூறியதாக தகவல்கள் சொல்கின்றன.
இந்தியக் குழு கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் சென்றடைந்தது. இந்தியா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்றிருக்கிறது. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மஹதீர் முகமதுவின் மலேசிய மக்கள் நீதிக் கட்சியை இந்தியக் குழு சந்தித்தது.
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்திய வரலாறு மற்றும் அரசியல் பற்றிய புலமை வாய்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளடக்கிய குழுக்கள் பல்வேறு உலக நாடுகளுக்கு பயணித்து வருகின்றன. மேலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கனிமொழி, தரூர், சஞ்சய் ஜா மற்றும் சுப்ரியா சுலே மற்றும் ஆளும் கட்சியின் கூட்டணி உறுப்பினர்கள் ரவிசங்கர் பிரசாத், பைஜயந்த் ஜெய் பாண்டா மற்றும் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோரும் இந்த குழுக்களில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாகிஸ்தான் மலேசியாவிடம் வைத்த “இந்திய குழுவின் பேச்சை கேட்காதீர்கள்” என்ற கோரிக்கையை மலேசியா நிராகரித்திருப்பது தான் Highlight. ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் பிரச்சினைக்கு முடிவு எட்டப்படாத நிலையில், பாகிஸ்தானின் கோரிக்கை மலேசியாவால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல் ஆபரேஷன் சிந்துார் தொடர்பான இந்தியக் குழுவின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மலேசியா அனுமதி அளித்து உள்ளது சற்றே பரபரப்பை உண்டாக்கியுள்ளது.