பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதிலடி தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் பாகிஸ்தான் பகுதியில் இருந்த 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதில், சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாகிஸ்தான் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். காஷ்மீர் பிரச்னை மற்றும் சிந்தி நதி நீர் பிரச்னை உள்பட அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம் என ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.