Saturday, July 12, 2025

பள்ளி குழந்தைகளின் உணவில் பெயிண்ட் : 233 பேருக்கு பாதிப்பு

சீனாவில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் குழந்தைகளுக்கான உணவில், உணவு பொருட்களுக்கு பதிலாக பெயிண்ட் கலந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகளின் உணவு, பார்ப்பதற்கு வண்ண மயத்தில் தோன்ற வேண்டும் என்பதற்காக இதை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த உணவை சாப்பிட்ட 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இதுபோன்று நடந்து வந்திருக்க கூடும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் தனியார் பள்ளி முதல்வர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news