1945ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் இறுதியில், அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டுகளை வீசியது. ஒரு நகரம் என்னும் பெயரே இல்லாமல் போன அந்த பேரழிவின் தாக்கம், இன்னும் பல தலைமுறைகளுக்கு மனத்தில் பதிந்தே இருக்கிறது.
அந்த காலத்தில் சோதிக்கப்பட்ட அணுகுண்டுகள் இன்று உலக நாடுகளிடம் உள்ள அணு ஆயுதங்களுடன் ஒப்பிட்டால் மிகவும் குறைந்த சக்தி வாய்ந்தவை. ஆனால் அதற்கே அந்தளவுக்கு பேரழிவு என்றால், இப்போது உருவாக்கப்பட்டுள்ள குண்டுகள் எந்த அளவுக்கு ஆபத்தானவை என்று எண்ணிக் கூட பார்க்க முடியவில்லை.
தற்போது, உலகில் 9 நாடுகள் அதிகாரப்பூர்வமாக அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. இவை அனைத்தும் வெவ்வேறு அளவிலும், வெவ்வேறு சக்தியிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில், மனித வரலாற்றில் இதுவரை சோதிக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த 5 அணுகுண்டுகள் குறித்து ஒரு பார்வை இப்போது பார்க்கலாம்.
முதலாவது இடத்தில் இருப்பது 1961இல் தயாரிக்கப்பட்ட ஜார் பாம்பா – இதுவரை சோதிக்கப்பட்டதிலே மிக சக்திவாய்ந்த அணுகுண்டு … இது தான் …
ரஷ்யா உருவாக்கிய இந்த மாபெரும் குண்டு, 58 மெகாடன் சக்தியுடன் வெடித்தது. ஹிரோஷிமா குண்டை விட 3,300 மடங்கு சக்தி அதிகம்! வெடிப்பின் அதிர்வுகள் 900 கி.மீ தூரத்திலிருந்த ஜன்னல்களை உடைத்தன. மேலும், 1,000 கி.மீ தூரத்தில் கூட அதன் மின்னல் தெரிய வந்தது. இதைக் காண அந்தக் காலத்திலேயே உலகம் நடுங்கியது.
இரண்டாவது இடத்தில் இருப்பது 1954 இல் தயாரிக்கப்பட்ட கேஸில் பிராவோ –
Castle Bravo எனப்படும் இந்த குண்டு, மிகவும் பெரிய எடையுடன் உருவாக்கப்பட்டது — சுமார் 10 டன். விமானம் மூலம் வீசக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இது, சோதனையில் எதிர்பார்த்ததைவிட 15 மெகாடன் சக்தியை வெளியிட்டு பெரும் அழிவை ஏற்படுத்தியது. கடல் அடியில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது, மேலும் ஆபத்தான கதிர்வீச்சு பரவியது.
மூன்றாவது இடத்தில் இருப்பது 1954 இல் தயாரிக்கப்பட்ட – கேஸில் யாங்கி …அசாதாரண சக்தி கொண்ட சிறிய குண்டு….
இந்த குண்டு சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், 13 மெகாடன் சக்தி கொண்டதாக வெடித்தது. வெடிக்கும்போது உருவான மஷ்ரூம் மேகம் வானத்தை 40 கி.மீ வரை உயர்ந்தது. அதன் தாக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது.
நான்காவது இடத்தில் இருப்பது 1952 இல் தயாரிக்கப்பட்ட – ஐவி மைக்.
உலகின் முதல் ஹைட்ரஜன் குண்டு, 12 மெகாடன் சக்தியுடன் வெடித்த போது, பசிபிக் கடலில் உள்ள எலுகெலாப் தீவை முற்றிலுமாக அழித்துவிட்டது. வெடிப்பால் உருவான மேகங்கள் 37 கி.மீ உயரம் கொண்டதாக இருந்தது. இது ஒரு தீவையே முழுமையாக அழித்ததன் மூலம் விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஐந்தாவது இடத்தில இருப்பது 1954-இல் அமெரிக்கா தயாரித்த _ கேஸில் ரோமியோ.
அமெரிக்காவின் Castle திட்டத்தின் கீழ் சோதிக்கப்பட்ட இந்த குண்டு, 11 மெகாடன் TNT சக்தியுடன், ஹிரோஷிமா குண்டை விட நூற்றுக்கணக்கான மடங்கு அழிவுகளை உருவாக்கக்கூடியது. இது அப்போது வளர்ந்து கொண்டிருந்த வெப்ப அணுக்கரு ஆயுத வளர்ச்சியில் ஒரு முக்கியக் கட்டமாக இருந்தது.
இவை எல்லாம் சோதனை மட்டுமே – ஆனால் பயன்படுத்தப்பட்டால் என்னவாகும் தெரியுமா?
இந்த அணுகுண்டுகள் ஒரு போர் சூழலில் பயன்படுத்தப்பட்டால், நகரங்கள் முழுமையாக அழிவதோடு, பல்லாயிரம் உயிர்கள் சில நொடிகளில் அழிந்துவிடும். மாசுபாடு, கதிர்வீச்சு போன்றவை பல தலைமுறைகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உலக நாடுகள் இன்று கூட அந்நிய பாதுகாப்பு, அரசியல் வலிமை காரணமாக இந்த ஆயுதங்களை வைத்திருக்கின்றன. ஆனால் இந்த சக்தி, ஒருநாள் மனித நேசத்திற்கு எதிராக பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும் என்பது தான் உலகத்தின் வெற்றிக் குறிக்கோள்.