Wednesday, December 24, 2025

சீமானுக்கு ஷாக்.., திமுகவில் இணைந்த நா.த.க. நிர்வாகிகள்

கடந்த ஆகஸ்ட் மாதம் தேனி​யில் தேவேந்​திரகுல வேளாளர் சமூகத்​தின் பட்​டியல் வெளி​யேற்ற கோரிக்​கையை வலி​யுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்​கூட்​டம் நடைபெற்றது. அப்போது நாதக நிர்​வாகி​யான கல்​யாணசுந்​தரம், புதிய தமி​ழ​கம் கட்சி தலை​வர் டாக்​டர் கிருஷ்ண​சாமியை கடுமையாக பேசியுள்ளார். அதை ரசித்த சீமான், அந்த மேடை​யிலேயே அவரை ஸ்ரீவில்லிபுத்​தூர் தொகு​திக்​கான வேட்​பாள​ராக அறிவித்தார்.

இதையடுத்து ஸ்ரீவில்​லிபுத்​தூர் நாதக நிர்​வாகி​கள், கல்​யாணசுந்​தரத்தை மாற்ற வேண்​டும் என தலை​மைக்கு கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொள்ளாத சீமான், கல்​யாணசுந்​தரம் தான் வேட்​பாளர். நான் சொல்​வதை கேட்​டால் கேளுங்​கள்​… இல்​லா​விட்​டால் வெளி​யேறுங்​கள் எனச் சொன்​ன​தாகத் தெரி​கிறது.

இதையடுத்​து, நாதக தகவல் தொழில்​நுட்ப பாசறை​யின் மாநில இணைச் செய​லா​ளர் சுபாஷ், அமைச்​சர் கே.கே.எஸ்​.எஸ்​.ஆர். ராமச்சந்திரனை சந்​தித்து தன்னை திமுக-​வில் இணைத்​துக் கொண்​டார். இவரை தொடர்ந்து நாதக வழக்​கறிஞர் பாசறை​யின் மாநில இணைச் செய​லா​ளர் பிர​பாகர மூர்த்​தி, குரு​திக்​கொடை பாசறை செய​லா​ளர் ராம​ராஜ் உட்பட இரு​பதுக்​கும் மேற்​பட்ட நிர்​வாகி​களும் திமுக-​வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

Related News

Latest News