தமிழ் மொழியில் இருந்து தோன்றியதை கன்னட மொழி என்ற நடிகரும், மநீம கட்சி தலைவரும் கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவான தக் லைஃப் என்கிற திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
சமீபத்தில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கலந்துகொண்ட சிவராஜ்குமாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பேசிய கமல்ஹாசன், சிவராஜ்குமார் குடும்பத்தினர் என் குடும்பம் தான் என்றும் தமிழிலிருந்து வந்ததுதான் கன்னடம் என்றும் கூறியிருந்தார்.
கமல்ஹாசனின் இப்பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகத்தில் தக் லைஃப் திரைப்படத்தின் விளம்பர பதாகைகளை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் மன்னிப்புக் கேட்க விட்டால் திரைப்படம் வெளியாகாது என்றும் கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
தமிழறிஞர்கள் மட்டுமின்றி, கன்னடத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களே, தமிழில் இருந்து தான், கன்னடம் பிறந்தது என்பதை ஏற்று இருக்கிறார்கள். கர்நாடகத்தில் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் வெளியிட அனுமதிக்காவிட்டால், தமிழ்நாட்டிலும் ஒரு கன்னடம் திரைப்படம் கூட வெளியிட முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.