Saturday, December 6, 2025

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மரியா! டிரம்புக்கு ஃபோனில் சொன்ன தகவல்! டிரம்ப் கொடுத்த ரியாக்ஷன்!

அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு அர்ப்பணிக்க இருப்பதாக, இந்த ஆண்டின் நோபல் பரிசு பெற்ற வெனிசுலா ஜனநாயக இயக்கத் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப், ‘மரியா என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார், மேலும் வெனிசுலாவில் ஜனநாயகத்துக்காக அவர் செய்கிற போராட்டத்திற்கு எனது முழு ஆதரவும் தொடரும்,’ என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மரியாவின் இந்த முடிவு சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, நோபல் கமிட்டி டிரம்ப்க்கு விருது வழங்காதது குறித்து வெள்ளை மாளிகை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு இயக்குநர் ஸ்டீவன் சியாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நோபல் கமிட்டி அமைதியை விட அரசியல் காரணங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளது. உண்மையில் உலக அமைதிக்காக பல முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டவர் டிரம்ப் தான்,’ என்று கூறியுள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்றாலும், அதிபர் டிரம்ப் உலக அமைதிக்காக தொடர்ந்து முயற்சி செய்வார் எனவும் அவர் தெரிவித்தார். டிரம்பின் தலைமைக்கீழ் மேற்கொள்ளப்பட்ட மத்திய கிழக்கு அமைதி ஒப்பந்தங்கள், பல நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை குறைத்ததாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதனால், நோபல் கமிட்டியின் முடிவுக்கு எதிராக அமெரிக்காவில் அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், மரியா கொரினா மச்சாடோவின் இந்த நடவடிக்கை, டிரம்பின் சர்வதேச மதிப்பை மீண்டும் உயர்த்தும் வகையில் பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News