ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.. ஜூன் மாதம் முதல் விதிமுறைகள் அமலுக்கு வரலாம் என்கின்றனர். அதாவது ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும்.
மீதமுள்ள நாட்களில் வங்கிகள் அடைக்கப்படும். சனிக்கிழமைகளில் எந்தப் பரிவர்த்தனைகளும் நடக்காது. அதாவது வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை கேட்டு வருகின்றனர்.
இப்போது இந்த விடுமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களும் வங்கிகள் அடைக்கப்படும். தற்போது இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிச் சேவைகள் அடைக்கப்படுகின்றன. இப்போது இந்த விடுமுறையை மத்திய அரசு நீட்டிக்கப் போகிறதாம்.
சரி, இரண்டு நாட்கள் அடைக்கப்பட்டால்,வாங்கி வேலைகளை எப்படி முடிப்பது என்று தானே நினைக்கிறீர்கள்? அதற்கு மத்திய அரசு திட்டம் வைத்துள்ளது..
அதாவது சனிக்கிழமை வங்கிகள் மூடப்படுவதால், இரண்டு shift-களில் வங்கிகளைத் திறந்து வைக்க மத்திய அரசு திட்டம் வைத்துள்ளதாம். அதாவது, மாலையிலும் பரிவர்த்தனை வசதிகள் கிடைக்கலாம். பலருக்கு அலுவலக வேலையில் வாரம் முழுவதும் செல்லமுடியாமல் இருக்கும்.. அவர்களுக்குப் பரிவர்த்தனை செய்ய சரியான நாளாக சனிக்கிழமை மட்டுமே இருக்கிறது..
ஆகையால், இதனைக் கருத்தில் கொண்டு, மாலையிலும் வங்கிகளைத் திறந்து வைக்க மத்திய அரசு திட்டம் வைத்துள்ளதாம். வாரத்திற்கு 2 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க, மீதமுள்ள 5 நாட்களில் வங்கி ஊழியர்கள் கூடுதல் வேலை செய்ய வேண்டியிருக்கும். இது தவிர, இரண்டு shift-களில் வேலை செய்ய வேண்டியிருக்கும்.
இரண்டு shift-களின் பணிகள் எப்படி நடக்கும் என்று தெரியுமா??
அதாவது காலை முதல் மாலை வரை மற்றும் மதியம் முதல் இரவு வரை என இரண்டு shift-களில் ஊழியர்கள் பணிபுரிய மத்திய அரசு யோசனை செய்கிறதாம். இவையெல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில், ஜூன் மாதம் முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் இயங்காது.