நம்முடைய சாலைப் பயணங்களை வேகமாகவும் தடையில்லாமலும் மாற்றும் புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்துள்ளது .அது தான் FASTag-இன் “10 வினாடி விதி”. இந்த விதி, சுங்கச்சாவடிகளை கடந்துபோகும் வாகனங்களுக்கு மிக முக்கியமானதாக மாறியிருக்கிறது.
வாகனங்கள் FASTag பிரத்யேக பாதையை அணுகும்போது, அந்த வாகனம் 10 வினாடிகளுக்குள் சுங்கச்சாவடியைக் கடக்க வேண்டும். இதனால் சுங்கங்களில் ஏற்படும் நெரிசலும், நீண்ட காத்திருப்பும் குறைவடைகின்றன. உங்கள் வாகனத்தில் FASTag சரியாக ஒட்டப்பட்டிருக்க வேண்டும், அதனுடன் உங்கள் FASTag கணக்கில் போதுமான இருப்பும் இருக்க வேண்டும். இவையெல்லாம் சரியாக இருந்தால், உங்கள் வாகனம் RFID ரீடரால் விரைவில் ஸ்கேன் செய்யப்படும், கட்டணம் தானாகவே கழிக்கப்படும், மேலும் நீங்கள் சாலையில் தடையின்றி தொடரலாம்.
இந்த முறை, போக்குவரத்தையும், சுங்க வசூல் முறையையும் மிகச் சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கிறது. பயண நேரத்தை மிச்சப்படுத்துகிறது. ரொக்கம் இல்லாத பரிவர்த்தனை முறைக்கு மக்கள் முழுமையாக பழகி வருகிறார்கள்.
அதனால்தான், உங்கள் FASTag ஐ சீராக பராமரிக்கவும், கண்ணாடியில் தெளிவாக வைத்திருக்கவும், சுங்கச்சாவடியை அடையும்போது மிதமான வேகத்தில் செல்லவும் முக்கியம் என அறிவுறுத்தப்டுகிறது. இதெல்லாம் சரியாக இருந்தால், 10 வினாடிகளுக்குள் நீங்கள் சுங்கம் கடந்து பயணத்தை மென்மையாக தொடரலாம்.