Friday, August 15, 2025
HTML tutorial

RBI போட்ட புதிய உத்தரவு! 10 வருடம் டச் பண்ணலனா? உங்கள் பணம் போயிடும்!

ஏப்ரல் 16, 2025 முதல், இந்திய அரசு வங்கி லாக்கர் மற்றும் வங்கிக் கணக்குகளுக்கான நியமனம் தொடர்பான விதிகளை மிக எளிமையாக மாற்றியுள்ளது. 

முன்பு உங்கள் வங்கிக் கணக்குக்கு ஒரே ஒரு நாமினியை மட்டுமே சேர்க்க முடிந்தது. ஆனால் இப்போது அதே கணக்கிற்குள் நான்கு நாமினிகளை வரை நியமிக்கலாம். இதை அரசாங்கம் மக்களின் சௌகரியத்துக்காகவும், பின்வரும் நேரங்களில் சொத்து உரிமையில் சிக்கல்களின்றி உரிமை போகச் செய்வதற்காகவும் எடுத்த முடிவாகவே பார்க்கலாம்.

நாமினி நியமிப்பதற்காக இருவிதமான முறைகள் உள்ளன. ஒன்று ஒரே நேரத்தில் நாமினிகளை நியமிக்கும் முறை. இதில் நீங்கள் நியமிக்கும் நால்வருக்கும் நீங்கள் முன்கூட்டியே குறிப்பிட்ட பங்குகளை வழங்கலாம். எடுத்துக்காட்டாக, ஒருவர் 40% பெற வேண்டும், மற்றவர் 30%, அடுத்தவர் 20%, கடைசி நபர் 10% என திட்டமிடலாம். உங்கள் மரணத்திற்கு பிறகு, அந்த பங்குகள் அதற்கேற்ப அவர்களுக்கு வழங்கப்படும்.

இரண்டாவது முறை, அடுத்தடுத்து நியமிக்கும் முறை. இதில் முதல் நாமினி மட்டுமே பணத்தை பெறுவதற்கான உரிமை பெறுகிறார். அவர் இல்லாவிட்டால் அல்லது பணத்தை பெற மறுத்தால், அடுத்த நபருக்கே உரிமை சென்று, அப்படி நால்வருக்குள் ஒருவருக்கு அந்த உரிமை செல்லும்.

வங்கி லாக்கர் பற்றியும் ஒரு முக்கியமான மாற்றம் செய்துள்ளது அரசு. லாக்கருக்கும் நாமினி நியமிக்கலாம். ஆனால் லாக்கருக்கான நியமனம் ஒரே ஒருவருக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் அவரும் இல்லாத நிலை வந்தால், மூன்று பேரை அடுத்தடுத்து நியமிக்கலாம். இதனால், உங்கள் லாக்கரில் உள்ள பொருட்கள் யாருக்கு செல்வதென்று நிச்சயமாக முடிவெடுக்க முடியும்.

இதை நீங்கள் இப்போது செய்யவில்லை என்றால், பின் வரும் காலத்தில் உங்கள் வாரிசுகள் உயில், வாரிசுரிமைச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை தயார் செய்து, நீண்ட கால நீதிமன்ற நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். இதெல்லாம் அவர்களுக்கு ஒரு சிரமமாகவே இருக்கும்.

மற்றொரு முக்கியமான விஷயம் – பழைய வங்கி கணக்குகள்! நீங்கள் வங்கியில் சிறிது பணத்தை வைத்‌திருந்தால், அதில் 10 ஆண்டுகளாக எந்த பரிவர்த்தனையும் இல்லையென்றால், அந்த பணம் Reserve Bank of India-வின் DEA நிதிக்குச் செல்லும். ஆனால் நீங்கள் அதை மீண்டும் எடுக்கலாம், உங்கள் வங்கியின் உதவியுடன். அதேபோல், நீங்கள் ஒரு நிறுவன பத்திரத்தில் முதலீடு செய்து 7 ஆண்டுகள் அதை எடுக்கவில்லையென்றால், அந்த தொகையும் IEPF நிதிக்குச் செல்லும். இதுவே, ஈவுத்தொகைகளுக்கும் பொருந்தும்.

ஆகையால், இன்று நீங்களே உங்கள் வங்கிக்குச் சென்று உங்கள் கணக்கு மற்றும் லாக்கருக்கு நாமினியை நியமிக்கலாம். இது உங்கள் அன்புக்குரியவர்கள் எதிர்காலத்தில் எந்த பிரச்சனையையும் சந்திக்காமல் இருக்க மிக முக்கியமான ஒன்று. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News