இந்தியர்களின் தனிநபர் அடையாளத்திற்காக ஆதார் கார்டை இந்திய அரசு அறிமுகம் செய்தது. இதையடுத்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்காக UPI வசதியை அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் ஒவ்வொரு நபரும் ஒரு டிஜிட்டல் முகவரி ஐடியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் புதிய வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இந்த ஐடி ஒருவரின் வீடு அல்லது இருப்பிடத்தை துல்லியமாகவும் விரைவாகவும் கண்டறிய உதவும்.
இந்த சிறப்பு அடையாளம் வீடுகள் மற்றும் சொத்துக்களை மிகவும் துல்லியமாகவும் விரைவாகவும் அடையாளம் காண உதவும். வீடு வீடாகச் சென்று சேவைகளை சீராக வழங்குவதற்கு இது கணிசமாக உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.