தேசிய பத்திரிகை தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
பத்திரிகைகள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக இருக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் அதிகாரத்தில் இருப்போரால் அமைப்புகள் வளைக்கப்படலாம். பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரத்திற்கு அடிபணிய மறுத்து அதன் தோல்விகள், ஊழல்களை வெளிப்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு பாராட்டுகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
