மொழியை வைத்து பிளவு ஏற்படுத்த தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சிப்பதாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். அவரது கருத்திற்கு பதில் அளிக்கும் வகையில், முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இந்தி திணிப்பு மற்றும் பேரினவாதத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.
வாக்கு வங்கிக்கான கலவர அரசியல் இதுவல்ல. கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் குரல் நாடெங்கும் எதிரொலிப்பதால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது. என்று முதலமைச்சர் கருத்து பதிவிட்டுள்ளார்.