IPL போட்டியை ஸ்தம்பிக்க வைத்த பெண் !!

317
Advertisement

IPL போட்டியில் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார் பெண் ஒருவர் !!

IPL என்னும் இந்தியன் பிரீமியர் லீக் உலகின் மிகப்பெரிய டி20 லீக் ஆகும், அதற்கு ஒரு பெரிய காரணம் – கிரிக்கெட் மற்றும் பொழுதுபோக்கு ஒன்றாக இணைந்துள்ளது.

பல ஆண்டுகளாக, போட்டியின் சிறந்த தருணங்களைப் படம்பிடித்ததற்காக கேமராமேன்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளனர், அதே நேரத்தில் போட்டின் போது சேமராவில் தென்படும் சில ரசிகர்களும் பிரபலமடைந்ததை நாம் பாத்துருப்போம்.

இதுபோன்ற தருணங்களில் பெரும்பாலும் , விளையாட்டிற்கு முன் பிரபலமடையாத மர்ம பெண்கள் , இந்த தருணத்தில் கவனத்தை ஈர்த்துவருகின்றனர். தற்போது இதுபோன்ற மற்றொரு சம்பவம் தான் நடந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.

அந்த ஆட்டத்தின் பொது , ரிஷப் பந்த் கேட்ச் எடுத்தபோது கேமரா லென்ஸ் அவரை போகஸ் செய்த இடத்தில வெள்ளை நிற டாப் அணிந்திருந்த பெண் ஒருவர் கேமராவில் தென்பட்டார். அவரது படங்கள் சில நிமிடங்களிலேயே சமூக வலைதளத்தில் வெளிவந்த.போட்டி முடிவதற்கு முன்பே சமூக வலைத்தளத்தில் அவர் வைரலானார். போட்டி தொடங்குவதற்கு முன்பு சமூகவலைதளப்பக்கத்தில் அந்த பெண்ணை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 29.9K ஆக இருந்தது, ஆட்டம் முடிவில் அவரைப் பின்தொடர்பவர்கள் 37.8K ஆக அதிகரித்தனர்.

MysteryGirl மற்றும் #AartiBedi என்ற ஹேஷ்டேக்குகளுடன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அந்த பெண்ணின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஒரே IPL போட்டியில் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார் இந்த பெண்.