Sunday, June 1, 2025

சீமான் கட்டிய பொய் கோட்டை இடிந்துவிட்டது – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்துள்ளார்.

இந்நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கருத்து தெரிவித்துள்ளார். “பெரியார் குறித்து சீமான் கட்டிய பொய் கோட்டை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவின் மூலம் இடிந்து போயுள்ளது. சீமானின் அரசியல் பொய்யை நம்பி அவர்பின் சென்றவர்கள், இனியும் விலகுவார்கள்” என பேசியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news