Thursday, July 17, 2025

நாடாளுமன்றம் அருகே தீ குளித்து தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு

டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடம் அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அருகில் இருந்த காவலர்கள் தீயை அணைத்தனர்.

உடனடியாக அந்த நபரை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலைக்கு முயன்ற நபர் உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில் வசிக்கும் ஜிதேந்திரா என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news