Wednesday, July 2, 2025

உயிரை பறித்த செல்பி மோகம் : ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்ததால் விபரீதம்

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் சாஹிர் அலி(வயது 24) என்ற நபர் அப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்துள்ளார். அப்போது பின்னால் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news