Thursday, August 7, 2025
HTML tutorial

உயிர் போகும் அளவுக்கு தெரிந்தே அடித்த காவலர்கள் : அஜித்குமார் வழக்கில் புதிய தகவல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், கடந்த ஜூன் 28-ம் தேதி நகை காணாமல் போன வழக்கில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியபோது அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று காவலர்கள் 5 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.இதில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருடிய குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால் தனிப்படை காவலர்கள் 5 பேர் உயிர் போகும் என தெரிந்தே அடித்ததாக எப்.ஐ.ஆரில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டபோது வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் இறந்ததாக காவல்துறை தெரிவித்தது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News