விவசாயிகளுக்கு குட் நியூஸ் ; குறைந்த வட்டியில் ரூ.5 லட்சம் வரை கடன்

உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கிக்கொள்ளவும் 2025-26 நிதியாண்டில் 25 லட்சம் புதிய விவசாயிகளை “கிசான் கிரெடிட் கார்டு” (Kisan Credit Card – KCC) திட்டத்துடன் இணைக்கும் மிகப்பெரும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கிசான் கிரெடிட் கார்ட் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. கடந்த காலத்தில் ரூ. 3 லட்சமாக இருந்த கடன் வரம்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

2024-25 நிதியாண்டில் உத்தரப் பிரதேசத்தில் 71 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு இந்த கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை மேலும் விரிவாக்கி, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து தகுதியுள்ள விவசாயிகளையும் இந்த திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடனை பெற விருப்பமுள்ள விவசாயிகள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் அடையாள அட்டை (ஆதார், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் என ஒரு ஒன்று), முகவரி சான்று, நில உரிமை சான்று, பயிர் விவரங்கள் மற்றும் படிவம் போன்றவை தேவையாக உள்ளன. கடன் வரம்பு அதிகமான விவசாயிகள் கூடுதல் பாதுகாப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Related News

Latest News