சமீப காலமாக உலகளவில் பெரிய நிறுவனங்களில் பணிநீக்க செயல்முறையை அதிகப்படுத்தியுள்ளது. நிறுவனங்களை மறுசீரமைப்பது, செலவுகளை குறைப்பது, ஊழியர்களுக்கு பதிலாக செயல் நுண்ணறிவைப் பயன்படுத்துவது போன்ற காரணங்களுக்காக பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், உலகளவில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 16,000 பேரை பணிநீக்கம் செய்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.