கடவுளின் பெயரால்…போர் தொடங்குகிறது!
இந்த ஒரு வரியே இப்போது மத்திய கிழக்கை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேலின் சியோனிஸ்ட் ஆட்சிக்கு நேரடியாகக் குரல் கொடுத்து, “வலுவான பதிலடி கொடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
இது எப்போது வந்தது தெரியுமா?
சமீபத்தில், ஈரானின் புரட்சிகர காவல்படை, ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இஸ்ரேலுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதாக அறிவித்த பிறகு தான்.
அதற்குப் பதிலாக, புதன்கிழமை விடியற்காலையில் இஸ்ரேலிய போர் விமானங்கள், ஈரானின் தலைநகரை குறிவைத்ததாக தகவல்கள் வந்தன.
மேலும், “மாவட்டம் 18” எனப்படும் பகுதியில் மக்கள் உடனடியாக வெளியேற சொல்லி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூட களத்தில் இறங்கி, ஈரான் நிபந்தனையற்ற சரணடைதல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்.
ஆனால், இஸ்ரேலின் தாக்குதல்களில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என்றும், ஈரான் இப்போது பொறுமையை இழந்து வருகிறது என்றும் எச்சரிக்கையும் விடுகிறார்.
இவ்வாறு தீவிரமடைந்து வரும் மோதலுக்கு மத்தியில், ஆழமாகப் புதைந்துள்ள ஈரானிய அணுசக்தி நிலையங்களை அழிக்க டெல் அவிவ், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட GBU-57 மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டரை (MOP) பயன்படுத்த முயற்சிப்பதாக செய்திகள் வந்துள்ளன.
இது ஒரு சாதாரண ஆயுதம் இல்லை.
30,000 பவுண்ட் எடையுடன், 20 அடி நீளமுள்ள இந்த குண்டு,
60 மீட்டர் ஆழம் வரை கான்கிரீட்டை துளைத்துவிட்டு வெடிக்கக்கூடிய சக்தி கொண்டது.
அணு குண்டு இல்லாமலேயே, ஒரு அணு ஆயுத நிலையத்தை அழிக்கக்கூடிய அதிரடியான ஆயுதம் இது.
இது போல் ஆழமாக பதுங்கி உள்ள அணுசக்தி தளங்களை அழிக்கவே இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், இஸ்ரேலிடம் இதைப் பயன்படுத்தும் திறன் உள்ளதா? என்றால்,
அதற்கான பதில் – இல்லை…
இந்த GBU-57 குண்டை தூக்கி செல்ல B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் பாம்பர் விமானம் தேவைப்படும்.
ஆனால் இஸ்ரேலிடம் இது கிடையாது.
இப்போது வைத்திருக்கும் F-15, F-35 விமானங்கள் இவ்வளவு கனமான குண்டை சுமக்க முடியாது.
அதனால் தான் இப்போது ஒரு கேள்வி எழுகிறது – அமெரிக்கா தான் ஈரான் மீது இதனை கையாளப் போகிறதா? என்று ,
இது ஒரே ஒரு நாட்டின் தாக்குதல் மட்டும் அல்ல.
இஸ்ரேல் தரவுகளை வழங்கும்… அமெரிக்கா தாக்குதல் நடத்தும்.
இது தான் யதார்த்தம்.
MOP என்பது வெறும் குண்டு அல்ல –
துவக்கி விட்டால் முடிவே தெரியாத ஒரு போருக்கான தூண்டில்.
இப்போது மத்திய கிழக்கு, ஒரு பயங்கர வெடிகுண்டாக மாறி, வெடிக்காமல் பதறி நிற்கிறது.
கடவுளின் பெயரில் தொடங்கிய இந்த போரின் முடிவில், மனிதர்கள் தான் பலியாகப் போகிறார்களா?
இது உலக அமைதிக்கே ஒரு பெரிய சவாலை ஏற்படுத்தப்போகிறதா?
பேரிடியும்… பதிலடியும்… ஆகியவைக்கு நடுவே நடக்கும் ஒரு வெடிக்கத் தயாரான நிசப்த போர் இது!
கவனத்தில் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான்….வெடிகுண்டு என்பது சாதாரண விஷயம் கிடையாது….ஜப்பானில் அதன் விளைவுகள் இன்றளவும் அதன் தாக்கத்தை நிலைநிறுத்தி வருகிறது…ஆனால் இப்போது எல்லா நாடுகளும் ஆளாளுக்கு வெடிகுண்டு போட்டு விடுவோம் என்பது அதிர்ச்சியை கிளப்புகிறது…