Friday, June 20, 2025

‘உயிருடன்’ வந்த காமெனியின் தோஸ்து! இஸ்ரேலுக்கு பேரதிர்ச்சி? ஈரானை கதறவிட்ட புது ரிவென்ஜ்!

இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பான திருப்பங்களுடன் போர் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஈரான் உச்ச தலைவர் அலி காமெனியின் முக்கிய ஆலோசகரான அலி ஷம்கானி இன்னமும் உயிருடன் இருப்பதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அவர் தற்போது பலத்த காயங்களிலிருந்து குணமடைந்து வருவதாக ஈரான் அரசாங்கம் சார்ந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் அதாவது ஜூன் 13 அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் அலி ஷம்கானி கொல்லப்பட்டதாக ஈரானின் ஊடகங்கள் உட்பட பல சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது அதே ஊடகங்களில், அவர் உயிருடன் இருப்பதாகவும், “நான் உயிருடன் உள்ளேன், என் உயிரையும் தியாகம் செய்யத் தயார்,” என்று அவர் கூறியதாகவும் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இந்த தகவலின்படி, அலி ஷம்கானி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது நிலைமை சீராகி வருவதாகவும் கூறப்படுவது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

இதற்கிடையே ‘ஈரானின் உச்ச தலைவர் அலி காமெனியை இனி உயிருடன் இருக்க அனுமதிக்க முடியாது’ என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்திருக்கிறார். இந்த சூளுரை இஸ்ரேல் ஒரு மெகா நகர்வை நோக்கியே பயணிக்கிறது என்பதை உறுதிசெய்வதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news