Monday, January 26, 2026

பராசக்தியில் முக்கிய காட்சிகள் நீக்கம்., அண்ணா பேசிய வசனமும் நீக்கம்

சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம், வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தமிழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், படம் வெளியாகும் முன்பே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

‛பராசக்தி’ திரைப்படத்துக்கு சென்சார் சான்று கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்த நிலையில், தற்போது, ‘பராசக்தி’ படத்திற்கு U/A சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து திட்டமிட்டபடி ‘பராசக்தி’ திரைப்படம் நாளை வெளியாகிறது. இருப்பினும் படத்தில் இருந்து பல முக்கிய காட்சிகள் மற்றும் வசனங்களை சென்சார் போர்டு நீக்கி இருக்கிறது.

நீக்கப்பட்ட வசனங்கள் மற்றும் காட்சிகள்

‘தீ பரவட்டும்’ என்ற வசனம் நீக்கப்பட்டு அதற்கு பதில் ‘நீதி பரவட்டும்’ இடம்பெறும்.

தீயிட்டு கொளுத்தும் காட்சிகள், வன்முறை காட்சிகள், இறந்த உடல்களை காட்டும் நேரம் 50% குறைப்பு.

ஹிந்தி அரக்கி என வரும் இடங்களில், அரக்கி என்ற வார்த்தை நீக்கம்.

ஹிந்தி அரக்கி உருவ பொம்மை எரிப்பு காட்சி நீக்கம்.

ஹிந்தி எழுத்துக்கள் மீது சாணம் அடிக்கும் காட்சி நீக்கம்.

“அந்த அச்சம் எவ்வளவு காலம் உங்களிடம் இருக்கிறதோ, அவ்வளவு காலமும் அண்ணாத்துரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்” என அண்ணா பேசும் காட்சி நீக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News