பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான காஜோல், ராணி முகர்ஜி, அயன் முகர்ஜி, ஆலியா பட், அஜய் தேவ்கன் போன்ற பலர் மும்பையில் நடைபெற்ற பிரம்மாண்டமான துர்கா பூஜையில் கலந்து கொண்டனர். இந்த கொண்டாட்டத்தின் நடுவே எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது நடிகை காஜோல் படிக்கட்டுகளில் இறங்கும் போது, சற்றே தடுமாறுவது போன்ற காட்சி உள்ளது. அப்போது, அவருடைய பாதுகாவலர் என்று நம்பப்படும் ஒரு நபர் விரைந்து வந்து அவரைப் பிடிக்கிறார். இதனால் அவர் ஷாக் ஆகியுள்ளார்.
அந்த நபர் கஜோலைத் தொட்ட விதம் தான் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். அதை “பேட் டச்” என்று விமர்சித்து வருகிரார்கள். வீடியோ பரவ ஆரம்பித்ததும், “அந்த நபர் யார்?”, “இந்த வீடியோ உண்மையா?” போன்ற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பினர்.