நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் படக்குழு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு U/A சென்சார் சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சிறிது நேரத்தில் ஜனநாயகன் தனி நீதிபதி உத்தரவை நீதிமன்றம் தடை செய்தது.
இதையடுத்து ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியது. அப்போது, இந்த மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை எனக்கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
